Sunday 14 February 2016
Thursday 11 February 2016
11வது கரிசல் திரை விழாவில் சென்னை பல்கலைக்கழகம் முதலிடம்
11வது கரிசல் திரை விழாவில் வெற்றி பெற்ற சென்னை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் |
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற கரிசல் திரை விழாவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த கோப்பையைப் வென்றனர்.
வ.உ.சி.அரங்கில் நடைபெற்ற நிறைவு விழாவில் துறைத்தலைவர் பெ.கோவிந்தராஜு, கூட்டுக்குழு உறப்பினர் ராதாகிருஷ்ணன் நாயர் மற்றும் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, எழுத்தாளர் நாறும்பூ நாதன் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக பத்திரகையாளர் சமஸ் பங்கேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்தக் கோப்பையைக் கைப்பற்றினர். பாளையங்கோட்டை துய சவேரியார் பள்ளி மாணவர்கள் இரண்டாவது இடம் பெற்றனர்.
விழாவில் பேசய பத்திரிகையாளர் சமஸ், ‘பத்திரிகையாளன் என்பவன், நாம் எங்கு இருக்கிறோம் என்பதைவிட எவ்வளவு சுதந்திரமாக இயங்குகிறோம் என்பது மிக முக்கியமானது. இதன் மூலமாகவே அவனால் மக்களுக்கு தேவையான செய்திகளை கொண்டு செல்ல முடியும்.
தொழில்நுட்பம் படித்தவரும், இதழியல் படித்தவரும் ஊடகங்களில் பணிபுரிகிறார்கள். இருவரையும் பிரித்துக் காட்டுவது என்பது ஆழ்ந்த வாசிப்பு மட்டுமே. ஆழ்ந்த வாசிப்பு என்பது ஒரு தியான நிலையைப் போன்றது. இதன் மூலமாகவே மனதை ஒருமுகப்படுத்தி நம்மால் இதழியல் துறையில் பணியாற்ற முடியும். இதை தவிர ஒருவரின் தன்னூக்கமிக்க செயல்பாடே அவரை தனித்த அடையாளமாக இருக்கும்.
பத்திரிகையாளர்கள் அனைத்து துறையிலும் வித்தகராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக தன் சுற்றுச்சூழலை நன்கு கவனித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படவேண்டிய ஆர்வம் தான் அவசியம். இவைய அனைத்தையுமே புத்தக வாசிப்பு என்னும் தியானம் மூலம் பெற முடியும்.
ஆனால், இன்றைய காலத்தில் வாசிப்பு என்பதே அருகிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, யாருடைய கையிலும் கடிகாரம் இல்லை என்பதற்காக மணி பார்க்கும் பழக்கமே ஒழிந்துவிட்டது எனச் சொல்ல முடியுமா? அதுபோலவே இன்றைய காலக்கட்டத்தில் துரித வாசிப்பு என்னும் பழக்கமே உள்ளது. இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஒரு நிகழ்வை செய்தியாக மக்களுக்கு கொடுக்க கூடிய எவரும் செய்தியாளர் ஆகலாம். ஆனால், செய்தி மக்களுக்கான தேவை உணர்ந்ததாக இருக்க வேண்டும்.’ என்று கூறினார்.
-Media Team, 11th Karisal Thirai Vizha 2016
-Media Team, 11th Karisal Thirai Vizha 2016
Thursday 4 February 2016
இந்தியாவின் வண்ணங்கள் எண்ணற்றவை: ஹென்க் ஒச்சப்பன் - பத்திரகைச் செய்தி
நெல்லை, பிப் 4: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கரிசல் திரை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.
வ.உ.சி கலையரங்கில் நடந்த புகைப்படப் போட்டியில் பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர் ஹென்க் ஒச்சப்பன் மாணவர்களின் புகைப்படங்களை முன்வைத்துப் பேசினார். தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது பேசிய ஹென்க் ஒச்சப்பன், ‘மதுரையில் ஜல்லிக்கட்டைப் புகைப்படம் எடுத்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இதுவரை எனது புகைப்படங்களில் சிறந்த படம் என்று அதைத்தான் சொல்வேன். ஏனென்றால், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு. அதனைத் தடைசெய்தது கவலைக்குரியது. என் புகைப்படங்களில் அடர்த்தியான வண்ணங்களையே பயன்படுத்துகிறேன். வண்ணங்கள் காலம் கடந்தும் அந்த தருணத்தை உயிர்போடு மீட்டுத்தரும். உற்சாகமூட்டும். அதற்காகே நான் வண்ணங்களை மிகவும் நேசிக்கிறேன். முதலில் அரவிந்தர் பற்றி அறிவதற்காகத்தான் இந்தியா வந்தேன். ஆனால், இந்த நாட்டின் எண்ணற்ற வண்ணங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. இங்கே நான் கண்டவற்றை சரியாகப் பகிர்ந்துகொள்ள என்னிடம் வார்த்தைகள் இல்லை. அதனால், புகைப்படங்களில் அவற்றைச் சொல்கிறேன்’ என்று கூறினார்.
இந்த நிகழ்வில், துறைத்தலைவர் பெ.கோவிந்தராஜு மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சிரிய நாட்டு இயக்குநர் ரூபன் லகட்டொல்லாவின் ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடந்தது.
-Media Team, 11th Karisal Thirai Vizha 2016
-Media Team, 11th Karisal Thirai Vizha 2016
Wednesday 3 February 2016
11வது கரிசல் திரை விழா தொடக்கம் - பத்திரி்கைச் செய்தி
நெல்லை, பிப் 03: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்
11வது கரிசல் திரை விழா புதன்கிழமை தொடங்கியது.
மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையின் மனோ மீடியா கிளப் சார்பாக ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது கரிசல் திரை விழா. இந்த விழாவில் 300க்கும் மேற்பட்ட ஊடகத்துறை மாணவர்கள்
பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். மூன்று நாள் நிகழ்வுகளின் தொடக்க விழா புதன்கிழமை
காலை பல்கலைக்கழக வ.உ.சி. அரங்கில் நடந்தது.
தொடக்க
விழாவில், பல்கலைக்கழகக் கூட்டுக்குழு உறுப்பினரும் தொடர்பியல் துறை தலைவருமான முனைவர்.பெ.கோவிந்தராஜு
வரவேற்புரையாற்றினார். பதிவாளர் முனைவர்.அ.ஜான் டி பிரிட்டோ விழாவைத் தொடங்கிவைத்துப்
பேசினார். கூட்டுக்குழு உறுப்பினர் முனைவர் ராதாகிருஷ்ணன் நாயர் தலைமையுரை ஆற்றினார்.
மனோ மீடியா கிளப் தலைவர் ஹார்ட்லின் ஜெனித்த ரால்ஃப் மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளை
அறிமுகம் செய்தார். திரைப்பட ஆய்வாளரும் நடிகருமான யூகி சேது மற்றும் ‘கோடை மழை’ படத்தின்
இயக்குநர் கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில்
பேசிய யூகி சேது, “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாதாரண மனிதனைப்
போலவே தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். ஆனால், அவர் சாதாரணமானவர்களில் அசாதாரணமானவராக
இருந்தார். அவர்தான், கனவுகளின் வழியே தங்கள் திறமையை அறிய இளைஞர்களை ஊக்குவித்தார்.
நம் முன்னோர்கள் உலகிற்கே முன்னோடிகளாகத் திகழ்பவர்கள். அவர்கள் அறிந்துசொன்னவற்றை
மறந்துவிட்டது தான் நாம் செய்த தவறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது முன்னோடிகளிடம்
கடவுள் பற்றிய அக்கரை இல்லை. அதனால் தான் பல கடவுளர்களை நம் சமூகம் பெற்றது. அவர்களுடைய
கற்பனை வளமும் அதற்குக் காரணமாக இருந்தது. தற்கால சினிமாவில் தடம்பதிக்க நினைப்பவர்களுக்கு
வகுப்பறையைத் தாண்டிய கல்விதான் அவசியம். நியூட்டன் மரத்தடியில் ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்தைப்
போல புதிய சிந்தனைகள் அப்போது தான் உருவாகிறது. வாழ்வில் எந்த நிலையை எட்டுவதும் சாத்தியம்.
அதற்கு நம் திறமையை மட்டும் நம்பி அழைப்பதே அவசியம்” என்று கூறினார். தொடர்ந்து மாணவர்களுடன்
கலந்துரையாடல் நடைபெற்றது.
விழாவில்
பேசிய இயக்குநர் கதிரவன், “திரைப்படங்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய
வேண்டும். இதுவரை ஓவியங்கள், கல்வெட்டுகள் மற்றும் சுவடிகள் மூலம் வரலாற்றை அறிந்திருக்கிறோம்.
எதிர்காலத்திற்கு இப்போதைய திரைப்படங்களும் வரலாற்று ஆவணம் தான்” என்று கூறினார்.
முன்னதாக,
புகைப்படக் கலைஞர் ஹென்க் ஒச்சப்பன் மற்றும் யூகி சேது ஆகியோர் மாணவர்களின் புகைப்படக்
கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.
விழாவில்
தேர்வாணையர் பிரபாகரன், தொலைநிலைக் கல்வி இயக்குநர் கண்ணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை
வழங்கினர். நிறைவாக, மனோ மீடியா கிளப் துணைத்தலைவர் மாரீஸ்வரி நன்றி கூறினார்.
-Media Team, 11th Karisal Thirai Vizha 2016
-Media Team, 11th Karisal Thirai Vizha 2016
Tuesday 2 February 2016
11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - ஹென்க் ஒச்சப்பன்
தனது புகைப்படங்களில் மதுரை மாநகரையே தூக்கிக்கொண்டு அலையும் ஹென்க் ஒச்சப்பனின் இயற்பெயர் ஹென்க் ஜேக்கப்ஸ். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நமது மதுரைக்கு நிரந்தரமான விருந்தாளி. தனது ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் மதுரையின் முகங்களை உலகிற்கே காட்டிக்கொண்டிருக்கிறார் ஹென்க் ஒச்சப்பன்.
1987ஆம் ஆண்டு முதல் வருடம் தவறாமல் சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வரும் ஹென்க் ஒச்சப்பன், 1994ஆம் ஆண்டு தன் பயணத்தின் போது, ரிக்ஷாவண்டி ஓட்டிக்கொண்டிருந்த ‘ஒச்சப்பன்’ என்பவரைச் சந்தித்தார். ரிக்ஷாக்காரரான ஒச்சப்பனுடன் மதுரையின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிவந்ததார். அரைகுறை ஆங்கிலத்தில் மதுரையின் வண்ணங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினார் அந்த ஒச்சப்பன். ஒச்சப்பனின் நட்பிற்கு அடையாளமாக தன் பெயருடன் ஒச்சப்பன் என்பதையும் இணைத்துக்கொண்டார்.
அதற்குப் பிறகும் நீடித்த அவர்களது நட்பினால் ஹென்க் ஒச்சப்பன் ஆண்டுதோறும் தன் பயணித்தின் போது தனது நண்பரான ஒச்சப்பனின் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாக்கிக்கொண்டார். தற்போது மதுரையைத் தன் சொந்த ஊராகவே கொண்டாடிவருகிறார் ஹென்க்.
தன் தாய்நாடான பெல்ஜியத்தில் ஒன்பது மாதங்களும் மதுரையில் மூன்று மாதங்களுமாக ஒவ்வொரு ஆண்டையும் கழித்துவருகிறார் ஹென்க் ஒச்சப்பன். பெல்ஜியத்தில் இருக்கும் போதும், தன் புகைப்படங்களின் வழியே மதுரையின் எழிலைப் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறார். பெல்ஜியத்தில் தனது இயந்திர வாழ்க்கைக்கு மதுரையில் கழிக்கும் மூன்று மாதங்கள் தான் விடுதலைக்காலமாகிறது என்றார் ஹென்க் ஒச்சப்பன்.
வருசநாடு, மேலக்கால், உசிலம்பட்டி போன்ற கிராமங்களில் அடிக்கடி சுற்றிவந்திருக்கும் ஹென்க் ஒச்சப்பனுக்கு மாங்குடி தான் மிகப்பிடித்த ஊரு. அந்த சின்ன கிராமத்தின் இயற்கை வனப்பினால் அவ்வூரை சொர்க்க பூமியாகவே போற்றுகிறார் ஹென்க் ஒச்சப்பன்.
மதுரைக்கு வந்தால் கேமிராவும் கையுமாக படம்பிடித்துக்கொண்டிருக்கும் ஹென்க் ஒச்சப்பன் பெல்ஜியத்தில் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார். இருந்ததாலும் தன் தொழிலை வெளியிட்டுக்கொள்ளாமல் புகைப்படக்கலைஞராகவே தன்னை முன்னிருத்துகிறார் ஹென்க் ஒச்சப்பன். பத்து வயதில் பள்ளிக்கூடத்தில் நடந்த போட்டியொன்றில் ஒரு கேமராவைப் பரிசாகப் பெற்ற ஹென்க், அப்போதிலிருந்தே தன் தேடலுக்கான மூன்றாவது கண்ணாக கேமிராவை பாவித்துவருகிறார். இன்று வரை சுமார் 60,000 புகைப்படங்கள் கொண்ட பெரும் களஞ்சியத்தையே உருவாக்கியிருக்கிறார்.
பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், கோயில்கள், திருவிழாக்கள், பண்டிகைகள் என அனைத்தையும் தனது புகைப்படங்கங்களின் வாயிலாக ஆவணங்களாக்கிக்கொண்டிருக்கும் ஹென்க் ஒச்சப்பன் அவர்களின் வருகையால் பெருமிதம் அடைகிறது 11வது கரிசல் திரை விழா.
ஹென்க் ஒச்சப்பன் பற்றி மேலும் அறிய,
Monday 1 February 2016
11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - கதிரவன்
‘கோடை
மழை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கதிரவன். முதல் படத்திற்கு முன்
நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தார். யாழ் தமிழ்த்திரை என்ற பட நிறுவனத்தின் சார்பில் அலெக்சாண்டர்
என்பவர் தயாரித்திருக்கிறார். புதுமுக நாயகன் கண்ணன் மற்றும் ‘கங்காரு’ படத்தில் நடித்த
பிரியங்கா, இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
கதிரவனின்
‘கோடை மழை’ திரைப்படத்தின் தலைப்பு கோடைக்கால மழையைக் குறிப்பது அல்ல. கோடை – மழை என
கோடை காலத்தையும் மழை காலத்தையும் குறிக்கும் இரண்டு தனிச்சொற்கள். இந்த இரண்டு வார்த்தைகளில்
தான் படத்தின் கதையே உருவாகிறது. திரைப்படத்தில் நாயாகனாக நடித்துள்ள கண்ணன் ராணுவ
வீரர். கோடைக்காலத்தில் ஒரு முறையும் மழைக்காலத்தில் ஒரு முறையும் என இரண்டு முறை தன்
சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு வருகிறார் கதாநாயன். அப்போது, கதாநாயாகன் தன் வாழ்வில்
நடக்கும் சம்வங்களையே திரைப்படமாக்கியுள்ளார் கதிரவன்.
திருநெல்வேலிக்காரான
கதிரவனுக்கு திருநெல்வேலி மக்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளதைப்போலவே அதீத ஊர்பற்று உண்டு.
பத்திரகையாளர்களிடம் ‘கோடை மழை’ படத்தைப் பற்றிப் பேசும் போது, ‘நான் சங்கரன்கோவிலில் பிறந்தவன். அங்கே பலர் ராணுவத்திலும்,
காவல்துறையில் பணியாற்றி வருகிறார்கள். அங்குள்ள மக்களின் கதையை பாடமாக்க நெடுநாட்களாக
ஆசைபட்டேன். அந்த ஆசை ‘கோடை மழை’ படத்தின் வாயிலாக நிறைவேறுகிறது’ என்று கூறியிருக்கிறார்
கதிரவன்.
நம்ம ஊரு பிள்ளையான இயக்குநர் கதிரவன் அவர்களின் வருகையால் 11வது
கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.
கதிரவன் பற்றி மேலும் அறிய,
'கோடை மழை' திரைப்படம் பற்றி
'கோடை மழை' திரைப்படத்தின் பாடல்கள்
கதிரவன் பற்றி மேலும் அறிய,
'கோடை மழை' திரைப்படம் பற்றி
'கோடை மழை' திரைப்படத்தின் பாடல்கள்
- Media Team, 11th Karisal Thirai Vizha 2016
Sunday 31 January 2016
11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - சமஸ்
அன்றாடம் நிகழும் சமூக
அவலங்களின் பின்னால் ஏற்படுகிற தனிமனித அவஸ்தைகளை அழுத்தந்திருத்தமாக தன் எழுத்தில்
வடித்து வருபவர் சமஸ். இதழியல் மாணவர்களுக்கு ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் உருவாகியிருப்பவர்.
எளிய நடையில் எழுத்து, சமகால பிரச்சனைகளை அதன் பின்புலத்துடன் தொலைநோக்குப் பார்வையில்
அணுகுவது, எழுத்துக்கு முக்கிய மூலங்களைக் களப்பணியின் வாயிலாக திரட்டுவது ஆகியவை சமஸின்
தனித்துவமான அடையாளங்கள். இதழியல் துறையில் சமஸின் பயணம் மிகவும் நெடியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்
1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி பிறந்தார் சமஸ். பள்ளிப்படிப்பையும் பட்டப்படிப்பையும்
உள்ளூரிலேயே முடித்தார். ஆங்கிய இலக்கியம் படித்த சமஸ் பள்ளிப்பருவத்திலேயே பத்திரிகைகளுக்கு
எழுத பேனா பிடித்துவிட்டார். இந்தியன், இந்தியன் இனி ஆகிய இதழ்களில் எழுதியது சமஸின்
இதழியல் ஆர்வத்திற்கு ஊக்கமூட்டியது. தொடர்ந்து தினமலர், தினமணி ஆகிய நாளிதழ்களிலும்
ஆனந்த விகடன் மற்றும் புதிய தலைமுறை ஆகிய வார இதழ்களிலும் பணியாற்றியபோது தன் எழுத்துகளின்
வாயிலாக வாசகர்களின் கவனத்திற்கு வந்த சமஸ், தி இந்து தமிழ் நாளிதழில் இணைந்ததும் தமிழகமெங்கும்
கவனம்குவிக்கிற ஆளுமையாக வளர்ச்சி அடைந்தார்.
2009ஆம் ஆண்டு தினமணியில்
சமஸ் எழுதிய தமிழக உணவுகள் பற்றிய சாப்பாட்டுப் புராணம் என்ற தொடர் தமிழ்நாட்டின் பல்வேறு
பகுதிகளில் புழங்கும் உணவு முறைகளையும் உணவுப் பதார்த்தங்களையும் பற்றிய அறியப்படாத
பதிவுகளை உள்ளடக்கிய ஆவணமாக அமைந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் தி இந்து
தமிழ் நாளிதழில் எழுதிய இந்தியாவின் வண்ணங்கள் தொடரில் பலதரப்பு மக்களின் தேர்தல் குறித்த
மதிப்பீடுகளையும் எதிர்பார்ப்பையும் பதிவுசெய்தார். 'நீர் நிலம் வானம்' என்ற தொடருக்காக
பல ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு கடலோடிகள், விவசாயிகள் மற்றும் வனவாழ் மக்களை நேரில்
சந்தித்து அவர்களுடனேயே தங்கி அவர்களுடைய அன்றாட வாழ்வையும் அவர்கள் எதிர்கொள்ளும்
சிக்கல்களையும் விரிவாக எடுத்துரைத்தார் சமஸ். நீர் நிலம் வானம் தொடர் பின்னர் புத்தகமாக
வெளியான சமயத்திலும் வாசகர்களிடேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்மையில் சென்னையை
பெரு வெள்ளம் தாக்கிய நாட்களில் சமஸ் தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய கட்டுரைகள் உலகெங்கும்
உள்ள வாசகர்களால் மிக அதிகமாக வாசிக்கப்பட்டுள்ளன. சமஸ் கட்டுரைகளின் தேர்ந்தெடுத்த
தொகுப்பு 'யாருடைய எலிகள் நாம்?' என்ற நூலாக கடந்த ஆண்டு வெளியானது. சில நாட்களுக்கு
முன், அந்த நூல் சிறந்த கட்டுரை நூலுக்கான சுஜாதா விருதையும் பெற்றுள்ளது.
சமஸின் எழுத்து சாமானியர்களிடையே
சமூக சிக்கல்களை ஆராயும் நோக்கையும் பொதுப்வெளியில் கவனம்செலுத்தும் ஈடுபாட்டையும்
அதிகப்படுத்தியுள்ளது. அதன் விளைவாக தி இந்து தமிழ் நாளிதழில் சமஸின் எழுத்தைத் தொடரும்
வாசகர் வட்டம் ஒன்றும் உருவாகியுள்ளது. சமூக மேம்பாட்டுக்கான இதழியலை தன் இயக்க சக்தியாக
கொண்ட தமிழ் ஊடகவியலாளர்களில் முன்னணி வகிக்கும் சமஸ் அவர்களின் வருகையால் கரிசல் திரை
விழா பெருமிதம் அடைகிறது.
சமஸ் பற்றி மேலும் அறிய,
சமஸ் பற்றி மேலும் அறிய,
- Media Team, 11th Karisal Thirai Vizha 2016
11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - ரூபன் லகட்டொல்லா
2007ஆம்
ஆண்டு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் பட்டம் பெற்ற ரூபன் ரோமிலுள்ள ஊடக நிறுவனங்களில்
பணிபுரியத் தொடங்கினார். 2011 முதல் தனக்கு மிகுந்த ஈடுபாடுடைய ஆவணப்படமெடுக்கும் முயற்சியில்
தொடர்ந்து இயங்கி வருகிறார். பெரும்பாலும் கள ஆய்வின் அடிப்படையில் அமைகிற ரூபன் லகட்டொல்லாவின்
படங்களில் வடக்கத்தி நாடுகளுக்கும் கிழக்கத்தி நாடுகளுக்கும் இடையேயான ஒப்பீடு முதன்மையான
அங்கமாகும். ரூபன் லகட்டொல்லாவின் இலக்கியம் மற்றும் மொழியியல் பயிற்சியின் பயனாக தனது
களப்பணிகளில் கிரகித்த அனைத்தையும் உகந்த முறையில் புரிந்துகொள்ளவும் அவற்றை எளிமையான
கதையைப்போலப் படமாக்கவும் முடிகிறது.
ஐரோப்பா,
பல்கன்ஸ். இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு
படமெடுத்துவருகிறார் ரூபன்.
'நான்
யார் என்பதை முடிவுசெய்ய எனக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. புகைப்படம், சினிமா, எழுத்து
எனத் தேடிய பிறகு.... நான் ஒரு கதைசொல்லி என்பதை அறிந்துகொண்டேன். புகைப்படங்களின்
வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் கதைசொல்லும் கதைசொல்லி நான்' என்று கூறியுள்ளார்
ரூபன் லகட்டொல்லா.
இந்த
இனிய தருணத்தில் ரூபன் லகட்டொல்லா அவர்களின் வருகைக்காக பெருமிதம் அடைகிறது 11வது கரிசல்
திரை விழா.
-
Ruben Lagattolla is a Documentary
Film Maker cum Photographer, Producer, Cameraman and Editor. He produce
documentaries particularly about geopolitics, anthropology and linguistics.
In 2007 Ruben finished his
Bachelor degree in English and French National and Post-Colonial Literatures
and Languages. Then, he started working in 2007 in the news environment among
national broadcasters such as SKY and RAI in Rome. Then with the experience, he
moved to documentary films production, which have always been his passion.
Many of his approaches are of personal research. His focus on human condition
is usually on comparison between western and eastern lifestyles. His formation
in literature and linguistics strongly characterized his explorations
empowering his storytelling as well as his understanding of inner and outer
human condition.
He makes more journey around the
world to produce films. Europe, Balkans, Israel, Palestine, Syria, Iraq,
Lebanon, Jordan. USA, Canada, Bahamas and Togo are the few among them. He
declares himself as a story teller. I his own words, 'It took a while to
understand what I do…photography, filming, writing. But what I conclude at the
end of my day is that I tell stories. The stories of the people. Stories
through photographs and films.
In this wonderful occasion, 11th
Karisal Thirai Vizha takes immense pleasure to have your valuable presents
here.
ரூபன் லகட்டொல்லா பற்றி மேலும் அறிய,
-
Media Team, 11th Karisal Thirai Vizha 2016
11வது கரிசல் திரை விழா 2016: சிறப்பு விருந்தினர் அறிமுகம் - யூகி சேது
யூகி சேது (Yugi Sethu) |
சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் சேதுராமன். தொனாலி ராமன் அவையில் இருந்த 'மதியூகி' என்ற அமைச்சரின் பெயரை தன் பெயருடன் இணைத்து சேதுராமன் யூகி சேது ஆனார். வணிகவியலிலும் அரசியலிலும் பட்டம் பெற்ற யூகி சேது இள வயதில் மிருதங்கம் வாசிப்பதிலும் பயிற்சி பெற்றார். ஆனால், யாருக்கும் பக்க வாத்தியமாக இருப்பதை விரும்பாத அவர் மிருதங்கப் பயிற்சியைக் கைவிட்டார். திரைப்பட இயக்கத்திற்கான பட்டயப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள யூகி சேது, தனது மாணவப் பருவத்தில் 'The Rhetoric of the Continuity' என்ற எட்டு நிமிடக் குறும்படத்தை எடுத்தார். சத்யஜித்ரே பின்னணி இசை அமைத்து, ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்த அந்தப் படம் 1984ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
யூகி சேது எழுதி, இயக்கிய முதல் படமான 'கவிதை பாட நேரமில்லை' 1987ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் வரும் 'காதல் என்ன காதல்' என்ற பாடல் உதடுகள் ஒட்டாமலே பாடுவதாக எழுதப்பட்டது. பிறகு, 1991ஆம் ஆண்டு வெளியான 'மாதங்கள் ஏழு' என்ற படத்தில் தான் யூகி சேது முதல் முதலில் நடிகராக அறிமுகமானார்.
அஜித்குமார் நடித்து அமோக வெற்றி கண்ட ஆசை திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவர் யூகி சேது. அஜித் குமாரின் மற்றொரு வெற்றிப் படமான 'வில்லன்' திரைப்படத்தின் கதையை எழுதியவர் யூகி சேது. அந்தப் படத்திற்கு 'சிறந்த கதைக்கான' விருதும் வென்றுள்ளார் யூகி சேது. அத்துடன் அஜித்தின் 'அசல்' படத்திற்கும் திரைக்கதை அமைத்துள்ளார். இயக்குநர் பாலாவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த 'நான் கடவுள்' திரைப்படத்தின் கதை விவாதத்தில் முக்கிய அங்கம் வகித்தவர் யூகி சேது. தமிழ் மட்டுமின்றி, 'Pidgin' என்ற இத்தாலியத் திரைப்படத்திலும் 'Scream of the Ants' என்ற பெர்ஷியத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் யூகி சேது.
'திரைப்படத்தில் அழகியல்' என்கிற கருப்பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் யூகி சேது. அத்துடன் தற்போது அரிய பழங்கால திரைப்படங்களைச் சேகரித்து, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.
திரைப்பட விமர்சகராகவும் விளங்கும் யூகி சேது திரைத்துறையின் பல்வேறு தளங்களில் தன் அடையாளங்களை பதிவுசெய்திருக்கும் வித்தகர். திரை கடலில் கப்பல் செலுத்த விரும்பும் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழும் யூகி சேது அவர்களின் வருகையால் 11வது கரிசல் திரை விழா பெருமிதம் அடைகிறது.
யூகி சேது பற்றி மேலும் அறிய,
-
Media Team, 11th Karisal Thirai Vizha 2016
Friday 22 January 2016
Wednesday 20 January 2016
Subscribe to:
Posts (Atom)